/indian-express-tamil/media/media_files/q0wp0eSUNcprSc3ACUvO.jpg)
கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், சேலம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.
வங்கக் கடலில் நிலவும் சூறாவளி காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள பல பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். வங்கக் கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையிக் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது என்பதை தெரிந்துகொள்வோம். தஞ்சாவூரில் 469 மி.மீ அளவு மழையும், புதுக்கோட்டையில் 315 மி.மீ மழையும், நீலகிரியில் 280 மி.மீ, சேலத்தில் 270 மி.மீ, திருப்பூரில் 172 மி.மீ பதிவாகி உள்ளது. இதுபோல ராமநாதபுரத்தில் 170 மி.மீ மழையும், சிவகங்கையில் 146 மி.மீ பதிவாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.