Advertisment

நிதிஷ் குமார் விலகல்- இந்தியா கூட்டணிக்கு பாதிப்பா? டி.ஆர். பாலு பதில்

இன்று சென்னையில் சீட் பகிர்வு குறித்து காங்கிரஸ், திமுக கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அப்போது, இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகியது குறித்து டி.ஆர். பாலு கருத்து தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
The DMK has demanded that the Prime Ministers speech regarding E V Velu be removed from the notes of the House

திமுக பொருளாளர் டி.ஆர். பாலு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

tamil-nadu-congress | dmk 2024 | மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அகில இந்திய அளவில் கூட்டணி அமைத்தன.

இந்தக் கூட்டணியில் திமுக, சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தன. இந்த நிலையில் இன்று சென்னையில் சீட் பகிர்வு குறித்து காங்கிரஸ், திமுக கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதற்கிடையில் பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் இன்று கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். முன்னதாக மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நிதிஷ் குமாரின் விலகல் குறித்து பேசிய டி.ஆர். பாலு, “நிதிஷ் குமார் விலகியதால் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

இந்தியை முன்னிலைப்படுத்தியவர் அவர், கூட்டணியில் இருந்ததால் அமைதியாக இருந்தோம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Congress Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment