பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெஞ்சாலையில் வேன் – டிராக்டர் நோருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர்.
அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“