/indian-express-tamil/media/media_files/2025/02/20/22bMBbRV0MS9apJltKBY.jpg)
இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகமாக வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா மற்றும் துபாய், மஸ்கட், சவுதி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக கோவை வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து மாங்காய் வந்து கொண்டு இருப்பதாகவும் தருமபுரியில் இருந்து மாங்காய்கள் வர தொடங்கியுள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும் என்றும் மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தற்போது மார்கெட்டில் மொத்தமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை தினசரி விற்பனையாகி வருவதாக பழ மண்டி வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.