சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் உஷார்

Chennai Tamil News: சென்னை ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈ.வி.ஆர். சாலை (பி.எச். ரோடு), பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்களை திருப்பி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Chennai Tamil News: சென்னை ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈ.வி.ஆர். சாலை (பி.எச். ரோடு), பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்களை திருப்பி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
New Update
சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் உஷார்

Chennai Tamil News: சென்னை ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈ.வி.ஆர். சாலை (பி.எச். ரோடு), பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்களை திருப்பி விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த போக்குவரத்து மாற்றத்தை சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

publive-image

இப்பணியினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில், சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை தேவையான மாற்றுப்பாதையை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஈ.வி.ஆர். சாலையில் செல்லலாம், அதே சமயம் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் கார்கள் எழும்பூரில் உள்ள டாக்டர் நாயர் பாலத்தில் திரும்பி வலதுபுறம் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Advertisment
Advertisements

வாகனங்கள் காந்தி - இர்வின் சாலையில் இடதுபுறமாக எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்று, காந்தி இர்வின் பாலம் வழியாக சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: