/indian-express-tamil/media/media_files/2025/10/04/chennai-gas-2025-10-04-17-08-21.jpg)
சென்னையில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் கழிவுநீர்க் கால்வாய்க்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் குப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கழிவுநீர்க் கால்வாய்க்குள் வேலைக்காக இறங்கியபோது, உள்ளே இருந்த நச்சு வாயு தாக்கியதால் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மயக்கமடைந்த குப்பனைக் காப்பாற்றுவதற்காக, சங்கர் மற்றும் ஹரி என்ற 2 நபர்களும் உடனடியாக கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி உள்ளனர். அவர்களுக்கும் விஷ வாயுவின் தாக்கம் ஏற்பட்டதால், இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷ வாயு தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.