/tamil-ie/media/media_files/uploads/2022/08/ap.webp)
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஊழியர்கள் முன்வைத்த சில கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று கூறப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக ஊதிய ஒப்பந்த்தை மாற்றியமைப்பது தொடர்பாக சரியான தீர்வு எட்டப்படவில்லை.
14-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டே அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில்தான், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
14வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் 6 கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய கோரிக்கைகளை அரசு செய்து தரும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். ஆனால் ஒட்டுமொத்தமாக ஊதிய ஒப்பந்தத்தை மாறியமைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.