Advertisment

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை: அரசு சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களுடன் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைப்பு.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை, கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Advertisment

தொடர்ந்து அரசு அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.  இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்ரவரி 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அமைத்த குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment