பெங்களூரு- சென்னை வந்தே பாரத் விரைவு ரயிலின் பயண நேரம் 25 நிமிடங்கள் குறைக்கப்பட்டு விரைவில் 4 மணிநேரமாக குறைக்கப்பட உள்ளது.
இதேபோல், 5 மணி நேரம் எடுக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடங்கள் குறைக்கப்படும். பெங்களூரு-ஜோலார்பேட்டை பிரிவில் வேக வரம்பை அதிகரிக்கும் திட்டத்தை தொடர்ந்து இது வந்துள்ளது.
தென்மேற்கு ரயில்வே (SWR) பெங்களூரு பிரிவு வியாழன் அன்று 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கிமீ வேகத்தை உயர்த்துவதற்கான வேக சோதனையை நடத்தியது. தினமும் இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் மற்றும் இரண்டு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த சோதனை மூலம் பயனடைய வாய்ப்புள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்குப் பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“