Advertisment

சேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை நில அதிர்வு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
salem tremour

salem tremour

சேலம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று காலை திடீரென சேலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, காமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 7.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வு சுமார் 2 நிமிடம் வரை நீடித்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த நில அதிர்வு பற்றி பொதுமக்கள் சிலர் கூறும்பொழுது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்பொழுது இந்நில அதிர்வு உணரப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதேபோன்று தர்மபுரியில் பென்னாகரம் அருகே ஏரியூர் சுற்று வட்டார பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

Dharmapuri Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment