Advertisment

திருச்சியில் 24 மணி நேர கட்டுபாட்டு அறை-ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திருச்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தயாராக உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருச்சி

திருச்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, மீட்புப் பணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விடுத்துள்ள அறிக்கையில்;  புகார் எண்:“1077, 0431-2418995 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு, மழை பாதிப்பு தொடர்பான புகாரை அளிக்கலாம்.

Advertisment
Advertisement

தொடர்ந்து, 93840 56213 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

     பகுதி                                கட்டுப்பாட்டு அறை புகார் எண்                வட்டாட்சியர் அலைபேசி எண்
திருச்சி கிழக்கு                                      0431-2711602                                                     9445461808
திருச்சி மேற்கு                                        0431-2410410                                                    9445000602
திருவெறும்பூர்                                       0431-2555542                                                     9790093270
ஸ்ரீரங்கம்                                                  0431-2230871                                                     9445000603
மணப்பாறை                                          04332-260576                                                     9445000604
மருங்காபுரி                                            04332-299381                                                     9840378255
லால்குடி                                                   0431-2541233                                                     9445000605
மண்ணச்சநல்லூர்                                 0431-2561791                                                     9445000606
முசிறி                                                        04326 260226                                                     9445000607
துறையூர்                                                  04327-222393                                                     9445000609
தொட்டியம்                                             04326-254409                                                      9445000608

இந்த கட்டுப்பாட்டு அறைகள் அல்லது வட்டாட்சியர்களின் அலைப்பேசி எண்ணிற்கு பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். தற்போது, பரவலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

க.சண்முகவடிவேல்


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment