யானை தந்தங்களுடன் திருச்சியை நோக்கி விரைந்த கார்... மடக்கிப் பிடித்த வனத்துறை; 5 பேர் கைது

திருச்சியில் யானை தந்தங்களை காரில் கடத்தி வந்த 5 பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் யானை தந்தங்களை காரில் கடத்தி வந்த 5 பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
 Trichy 5 held for Smuggling elephant tusks Tamil News

திருச்சியில் யானை தந்தங்களை காரில் கடத்தி வந்த 5 பேர் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி, ராம்ஜி நகர் அருகே வன உயிரின பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராம்ஜி நகர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துறை அதிகாரிகளை கண்டதும் கார் ஒன்று திருச்சி நோக்கி வேகமாக சென்றது.  

Advertisment

வனத்துறை அதிகாரிகள் அந்தக் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதில் இரண்டு யானைத் தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தந்தங்களை விற்பனைக்காக கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அதனை கடத்தி வந்த ராமசாமி, திருப்பதி, ஞானசேகரன், சுப்ரமணி, கார்த்தி ஆகிய 5 பேரையும்  வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அந்தத் தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் யானை தந்தங்கள் கடத்திக்கொண்டு வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Advertisment
Advertisements

 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: