/indian-express-tamil/media/media_files/2025/04/24/QcVtvaic26OG6vU9Ykts.jpg)
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத்து கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் கலந்து கொண்டு பொதுமக்கள் இடமிருந்து மனுக்களை பெற்றார். சுமார் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் ந.காமினி தலைமை வகித்தாா். இதில் பொதுமக்கள் நேரடியாக வழங்கிய 35 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி, விரைவில் உரிய தீா்வு காண அறிவுறுத்தினார்.
இதனைத் தொடா்ந்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் டிசம்பா், ஜனவரி மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன சுமாா் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான 95 செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் செல்போன் உரிமையாளர் களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உரியவரிடம் ஒப்படைத்தார்..இந்நிகழ்வில் காவல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.