Advertisment

அதிகாலை அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து: திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்து காரணமாக அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்து காரணமாககடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisment

சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணி முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செட்டியாபட்டி, கோரையாற்று பாலம் அருகே தனியார் பேருந்தும், டாரஸ் லாரியும் ஒன்றோடு ஒன்று முந்துவதற்கு முயன்றபோது, கோரையாற்று பாலத்தின் தடுப்பு சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

மேலும், இந்தப் பேருந்தின் பின்னால் வந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர்கள் விபத்து குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, அதே நெடுஞ்சாலையில் வந்த மற்றொரு லாரி மூன்றாவது பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

Trichy

Trichy

Trichy  

மழை நேரம் என்பதால் இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு ஓட்டுனர்கள், மூன்று பெண் பயணிகள், இரண்டு ஆண் பயணிகள் என ஏழு பேருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட இந்த விபத்து காரணமாக திருச்சி அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி சென்ற வாகனங்கள் 3 மணி நேரம் காத்திருந்து, விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்ட பின்பு புறப்பட்டுச் சென்றன. இந்த விபத்து காரணமாக திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிகாலை நேரம் என்பதாலும் தொடர் மழையாலும் இந்த விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment