திருச்சி - சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் கடும் அவதி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி - சார்ஜா பயணிக்க இருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி - சார்ஜா பயணிக்க இருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Trichy Air India Express flight to Sharjah held runway after technical snag Tamil News

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி - சார்ஜா பயணிக்க இருந்த விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் 176 பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு 176 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே ஓடுதளத்தில் சென்றபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த விமானம் நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர்.

Advertisment

இதனால் விமானத்தில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதியடைந்தனர். விமான நிறுவன பணியாளர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பயணிகள் ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டீ. காபி போன்ற பானங்களும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

அதேவேளையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்ய முடியாதநிலை இருந்ததால் மாற்று விமானம் மூலம் பயணிகளை சார்ஜா அனுப்பும் பணிகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: