திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.34 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்; 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்; 3 பேரை கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்; 3 பேரை கைது செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை

author-image
WebDesk
New Update
திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.34 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்; 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இதையும் படியுங்கள்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் உஷார்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த திருச்சியைச் சேர்ந்த முகமது சையது (34), ராஜ் முகமது (35), கலீல் ரகுமான் (34) ஆகிய மூன்று பேரின் உடைமைகளில் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மூன்று பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் வெளிநாட்டு நோட்டுகளைக் கொண்டு வந்ததை ஒப்பு கொண்டதன் அடிப்படையில் 3 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து அமெரிக்க டாலர், மலேசியன் ரிங்கட், சிங்கப்பூர் டாலர் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 2.34 கோடி மதிப்பு என கூறப்படுகிறது. மேலும் இந்த மூன்று நபர்களுக்கு வெளிநாட்டு பணத்தை கொடுத்தது யார்? இவர்கள் யாருக்கு பணம் கடத்தி செல்கிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் (USD) வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Airport

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: