/indian-express-tamil/media/media_files/YbWVFvYhLaVlDpEsphRt.jpg)
Trichy
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் மின்சார ரம்பத்தில் (Electric circular saw) மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 666 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக பயணியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.