அரிய வகை உடும்புகளுடன் சிக்கிய பயணி: திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட இரண்டு அரிய வகை உடும்புகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisment

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டனர்.

அப்போது, ஒரு பயணியின் உடமைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட இரண்டு உடும்புகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனடியாக அந்த உடும்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட இந்த உடும்புகள் எந்த வகையைச் சேர்ந்தவை, அவை எவ்வாறு கடத்தி வரப்பட்டன, மற்றும் யாருக்காகக் கடத்தப்பட்டன என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் சுங்கத்துறை அதிகாரிகள் உடும்பைக் கடத்தி வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

க. சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: