Advertisment

திருச்சியில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் கோளாறு: அதிர்ஷ்டவசமாக தப்பிய 160 பயணிகள்

அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 160 பேர் அதிர்ச்சி அடைந்து விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
yu

திருச்சி விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8:05மணிக்கு, 160 பயணிகளுடன் பெங்களூர் வழியாக மும்பை செல்லவேண்டிய தனியார் (இன்டிகோ) விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக புறப்படவில்லை.

Advertisment

இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள் 160 பேர் அதிர்ச்சி அடைந்து விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பயணிகளை சிறுசிறு குழுக்களாக பிரித்து மாற்று விமானங்களில் சென்னை வழியாக பெங்களூர் மற்றும் மும்பைக்கு அனுப்பி வைக்கும் பணியில் விமான நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்பதும், விமானம் பறக்கும் போது கோளாறு அறியப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேர்ந்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment