திருச்சி மற்றும் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக திருச்சியில் இருந்தும், திருச்சி வழியாகவும் செல்லும் சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண்:56700) வருகிற 5 ஆம் தேதி, 7 ஆம் தேதி, 12 ஆம் தேதி ஆகிய 3 நாட்களும் மயிலாடுதுறைக்கு செல்லாது. கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும். அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை விரைவு ரயில் (எண்:16847) வருகிற 5 ஆம் தேதி, 7 ஆம் தேதி, 12 ஆம் தேதி ஆகிய 3 நாட்களும் மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக கும்பகோணத்தில் இருந்து பகல் 12.42 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்.
திருச்சி - சென்னை சோழன் அதிவேக விரைவு ரயில் (எண்:22676) வருகிற 5 ஆம் தேதி, 7 ஆம் தேதி, 12 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் 10 நிமிடங்களும், லோக்மானியதிலக்- மதுரை அதிவேக விரைவு ரயில் (எண்:22101), ஹம்சபர் அதிவேக விரைவு ரயில் (எண்:20481) ஆகியவை வருகிற 7 ஆம் தேதி 30 நிமிடங்களும், கச்சிக்குடா- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (எண்:07435) வருகிற 9 ஆம் தேதி 40 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும்.
இதுபோல் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127) வருகிற 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 15 நிமிடங்கள் தாமதமாகவும், குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் (எண்:16128) வருகிற 6 ஆம் தேதி, 20 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
இதுபோல் ஈரோடு- திருச்சி பயணிகள் ரயில் (எண்:56106) வருகிற 6 ஆம் தேதி, 8 ஆம் தேதி ஆகிய நாட்களிலும், பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 6 ஆம் தேதி, 8 ஆம் தேதி, 10 ஆம் தேதி ஆகிய நாட்களிலும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரயில்கள் திருச்சிக்கு வராது.
திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) வருகிற 6 ஆம் தேதி, 8 ஆம் தேதி, 10 ஆம் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து பாலக்காடு புறப்படாது. மாறாக கரூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு பாலக்காடு புறப்படும். மேலும் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9 ஆம் தேதி வரை கோவை சந்திப்பு, வடகோவை, பீளமேடு வழியாக செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர் சந்திப்பில் இருந்து இருங்கூர் வழியாக இயக்கப்படும்.
இந்த தகவலை திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்