/tamil-ie/media/media_files/uploads/2023/03/Trichy-6.jpg)
TN Auto drivers to hold strike
திருச்சியில் ஏழு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் 15 நிமிடம் தங்கள் வாகனத்தை நிறுத்தி, மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ தொழிற்ச சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 12 மணியிலிருந்து 12:15 மணி வரை 15 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சியில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடி வருகிறது. இதில் 2500 ஆட்டோ ஓட்டுநர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் ஆட்டோ பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் நடத்தப்படுகிற வழிப்பறிக்கு முடிவு கட்டவும்,15 ஆண்டு வாகனத்தை அப்புறப்படுத்துகிறோம் என்ற அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும், டீசல் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஆட்டோ டாக்ஸிக்கு அரசாங்கம் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசாங்கமே, செயலியை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நிமிடம் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.