Advertisment

திருச்சி சாலையில் விதிகளை மீறி சாகசம் செய்த இளைஞர்; போலீஸ் வலை வீச்சு

சாகத்தில் ஈடுபட்ட நபர் முசிறி தாலுகா புலிவலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் நிவாஸ் என்பது தெரியவந்தது.

author-image
WebDesk
New Update
Bike tri.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்- துறையூர் சாலையில் இளைஞர் ஒருவர் தனது மாற்றம் செய்யப்பட்ட டி.வி.எஸ் 50 இருசக்கர வாகனத்தில் படுத்தவாறு ஓட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Advertisment

தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பதைப்பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சியை கண்ட பலரும் அதிர்ந்துள்ளனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்க தனது உயிரை பணயம் வைத்து சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் சாகத்தில் ஈடுபட்ட நபர் முசிறி தாலுகா புலிவலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் நிவாஸ் என்பது தெரியவந்தது. சாலை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட நிவாஸ் என்ற இளைஞர் மீது புலிவலம் காவல்துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

செய்தி:க.சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment