/indian-express-tamil/media/media_files/2025/10/03/madurai-high-court-2025-10-03-11-11-53.jpg)
திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் தாக்கல் செய்த மனுவில், உடலை மறுகூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்த ரேவதி தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் சுபின்குமார் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் கஞ்சா கடத்தியதாக வழக்கு பதிவு செய்து, அவரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆனால் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி சிறை அதிகாரிகள் தொலைபேசி மூலம், ‘சிறையில் உள்ள தொட்டியில் விழுந்து சுபின்குமார் உயிரிழந்தார்’ எனத் தகவல் தெரிவித்தனர். சிறைக்குள் 2 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட தொட்டி மட்டுமே உள்ளது. அதில் என் மகன் விழுந்து உயிரிழக்க முடியாது. அவரது மரணம் சந்தேகத்துக்குரியது. எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,” என கோரினார்.
இந்த மனு நீதிபதி சுந்தர்மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து, சுபின்குமார் உடலை மறுகூறாய்வு செய்ய வேண்டும். உடல் முழுவதும் எக்ஸ்-ரே எடுக்கப்பட வேண்டும். மறுகூறாய்வின் முழு செயல்முறையும் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். அறிக்கையின் நகலை மனுதாரருக்கும் வழங்க வேண்டும்,” என்று கூறினார். இதனையடுத்து, வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us