லோன் வாங்கி தருவதாக பல கோடி அபேஸ்: கணவன், மனைவி மீது காவல்துறையில் புகார்

திருச்சியில், லோன் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மற்றும் மனைவி குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில், லோன் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கணவன் மற்றும் மனைவி குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Try cheating case

திருச்சியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி மீது போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Advertisment

நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருச்சி அண்ணா நகரில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவருடன் தொழில் ரீதியான நட்பு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார் தனது தொழிலை விரிவு படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் பெற முயற்சித்து வருவதாக வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சசிகலா, சதீஷ்குமாருக்கு லோன் வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கான பணத்தை பெற்றுள்ளனர். இதேபோல், சதீஷ்குமாரின் நண்பரான தஞ்சையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் இருந்தும் பல லட்ச ரூபாயை பெற்றுள்ளனர். ஆனால், கூறியதை போன்று லோன் வாங்கி தராததால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

இதுபோன்று சுமார் ரூ. 10 கோடி வரை மோசடி செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகாரளித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment
Advertisements

செய்தி - க. சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: