/indian-express-tamil/media/media_files/2025/09/30/trichy-shop-protest-2025-09-30-20-24-38.jpeg)
திருச்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த 69 கடைகளுக்கு வாடகையை செலுத்தவில்லை எனக்கூறி போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 30) கடைகளுக்கு சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மேலப்புலிவார் ரோடு மற்றும் மரக்கடை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த 69 கடைகளுக்கு வாடகையை செலுத்தவில்லை எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவு எனக்கூறி கடைகளை அகற்ற வந்தாலும் அதற்கான நகல்களை சமர்ப்பிக்காமலும், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல், போலீசார் மூலம் கடை உரிமையாளர்களை மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளை சீல் வைத்ததாகவும் கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் போலீஸாருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, கடை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவியது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.