சத்திரம் பேருந்து நிலையத்தில் 12 கடைகளுக்கு சீல்

கடைகளில் வாடகை தராது இழுத்தடித்து வந்த சுமார் 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சென்று சீல் வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு நிலவுகின்றது

கடைகளில் வாடகை தராது இழுத்தடித்து வந்த சுமார் 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சென்று சீல் வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு நிலவுகின்றது

author-image
WebDesk
New Update
கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் வாடகை தராது இழுத்தடித்து வந்த சுமார் 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை சென்று சீல் வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததால் பரபரப்பு நிலவுகின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை நிலுவையில் உள்ள கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் உத்தரவிட்டார்.

அதன் பேரில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் பிச்சைமணி, செந்தில்குமார், ராஜேந்திரன் முன்னிலையில், வரித்தண்டளர்களைக் கொண்ட குழு சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கு வாடகை நிலுவை வைத்திருந்த 12 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.   மேலும், வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்திரம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் பரபரப்பான சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் சென்று கடைகளை பூட்டி சீல் வைத்த சம்பவம் வியாபரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: