/indian-express-tamil/media/media_files/2025/01/25/urQi0VlNnDgcX57XEifJ.jpg)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5வது மண்டலத்துக்குட்பட்ட 27வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் மு.அன்பழகன் தலைமை வகித்து உதவி ஆணையர் சென்னுகிருஷ்ண முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அதேபோல் முப்பத்தி ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் அப்பகுதி சுகாதார ஆய்வாளர் தலைமையில் பொதுமக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டது.
பெரும்பாலான மனுக்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாகவே இருந்ததாக மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்த மனுக்கள் குறித்து பொதுமக்கள் புலம்பினர்.
இந்தநிலையில், திருச்சி 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தலைமையில் சபா கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர். பல்வேறு தரப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
மேலும் பெரிய கம்மாளத் தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 20 வது வார்டு பகுதி முழுவதும் கொசு அதிகமாக இருப்பதாக கூறி கொசு வலையுடன் சபா கூட்டத்திற்கு அரை நிர்வாணத்தில் வர முற்பட்டார். அவரை அப்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.