பிரதமர் மோடி சாமி தரிசனம்... ஸ்ரீரங்கம் கோவிலில் பொதுமக்களுக்கு தடை : மாவட்ட நிர்வகம் அறிவிப்பு

பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய இருப்பதால், வரும் ஜனவரி 19-ந் தேதி முதல் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய இருப்பதால், வரும் ஜனவரி 19-ந் தேதி முதல் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sr

திருச்சி ஸ்ரீரங்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் மோடி டிசம்பர் 20-ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதால் பாதுகாப்பு நலன் கருதி 19-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20-ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல், பாரத பிரதமரை வரவேற்க பஞ்சக்கரை ரோடு வரும் அரசியல் கட்சியினர் வாகனங்கள் திருவானைக்கோவில் டிரங்க் ரோடு சோதனை சாவடி எண் : 6 அருகே கட்சியினரை, இறக்கி விட்டு நெல்சன் ரோடு ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

Trichy19.jpg

பஞ்சக்கரை ரோடு (ஹோட்டல் ஸ்ரீ) சந்திப்பு முதல் முருகன் கோவில், வடக்கு வாசல், அனைத்து உத்திர மற்றும் சித்திர வீதிகள், அடையவளஞ்சான் வீதிகளில் எந்த வாகனங்களும் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tiruchirappalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: