திருச்சியில் இன்று 2வது முறையாக இ.பி.எஸ். பிரச்சாரம்- அ.தி.மு.க.வினர் உற்சாகம்

சேலத்தில் இருந்து திருச்சி வரும் அவர், தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருப்பையாவுக்கு ஓட்டு சேகரித்து பேசுகிறார்.

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami attacks on MK Stalin govt and urges Cyclone Michaung rescue Tamil News

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, 2வது முறையாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஏப்.6) பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advertisment

கடந்த மாதம் 24-ம் தேதி திருச்சி வண்ணாங்கோவிலில் நடந்த அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில், 40 நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசிய எடப்பாடி பழனிசாமி, திருச்சி வேட்பாளர் கருப்பையாவையும் தனியாக அறிமுகப்படுத்தினார்.

பின்னர், அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 2-வது முறையாக எடப்பாடி பழனிசாமி, இன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advertisment
Advertisements

சேலத்தில் இருந்து திருச்சி வரும் அவர், தென் னுார் உழவர்சந்தை மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருப்பையாவுக்கு ஓட்டு சேகரித்து பேசுகிறார். அதன்பின்னர், தஞ்சாவூரில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

திருச்சியில் பிரச்சாரம் தொடங்கிய அவா், மீண்டும் பிரசாரத்திற்காக திருச்சி வருவதையடுத்து அதிமுக தொண்டா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உற்சாகம் அடைந்துள்ளனா்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: