Advertisment

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மரணம்; திருச்சியில் துயர சம்பவம்

கணவன் உடல் நலக்குறைவால் திடீரென இறந்துவிட, இதனை அருகில் இருந்து பார்த்த மனைவி அதிர்ச்சியில் அடுத்த பத்து நிமிடத்தில் மயங்கி விழுந்து மரணம்; திருச்சியில் சோக சம்பவம்

author-image
WebDesk
New Update
Trichy elder couple

கணவன் உடல் நலக்குறைவால் திடீரென இறந்துவிட, இதனை அருகில் இருந்து பார்த்த மனைவி அதிர்ச்சியில் அடுத்த பத்து நிமிடத்தில் மயங்கி விழுந்து மரணம்; திருச்சியில் சோக சம்பவம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ளது எச்.இ.பி.எஃப் தொழிற்சாலை இங்குள்ள டவுன்ஷிப் வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பிரசன்னா. இவரது மாமனார் கணேசன் (80). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று உடல் நலமின்றி இருந்து வந்தார். இவரது மனைவி கண்ணம்மாள் (70), உடல்நலமின்றி இருந்து வந்த கணவரை கவனித்து வந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் கணேசன் உடல் நலக்குறைவால் திடீரென இறந்துவிட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் அடுத்த பத்து நிமிடத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இறந்து போன கணவன் மனைவி இருவரையும் திருச்சி ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்தனர். இறந்து போன கணவன் மனைவி இருவருக்கும் சொந்த ஊர் ஊட்டி. இவர்கள் பணி மாற்றம் காரணமாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிக்கு வந்திருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இருவருமே ஒரே நேரத்தில் இறந்து போனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment