Advertisment

திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வழக்கறிஞர்கள் பணி புறகக்ணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Lawyesrs
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம். இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன.

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம்என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன.

இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tiruchirappalli Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment