பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டல்: திருச்சி போலீஸ் அதிரடியாக கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய நபரை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய நபரை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Trichy Man arrested for threatening and sharing obscene photos to woman Thiruverumbur Tamil News

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய நபரை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய நபரை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

Advertisment

மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவெறும்பூர் பகுதியில் அரசு போட்டி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி வழங்கக்கூடிய தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் இல்லாத செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதனை ஆன்செய்து பேசியபோது எதிர் முனையில் பேசிய அறிமுகம் இல்லாத நபர் ஆபாசமாக பேசியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து.மதுவினா அவரது என்னை பிளாக் செய்த நிலையில் வாட்சப் காலில் வந்து ஆபாசமாக பேசியதோடு ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு கொடுத்தது தொடர்பாக அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று வேங்கூர் பகுதியில் மாணவியை தேடிக்கொண்டு அந்த நபர் வந்துள்ளார் அப்படி வந்தவர் அங்கு ரோந்து பணியில் வந்த போலீசாரை கண்டதும்  போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். அதில் அவனது இடது கால் முறிந்துள்ளது.

Advertisment
Advertisements

பின்னர், அந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, போலீசாரிடம் பிடிபட்ட அந்த நபர் நாமக்கல் மாவட்டம் தாழையூர் மாங்குடி பட்டியை சேர்ந்த செங்கோட்டையன் மகன் சித்தன் (48) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் முறையாக போலீசார் விசாரித்த போது, தினமும் தனக்கு தோன்றிய செல்போன் எண்ணிற்கு போன் செய்வதாகவும் அப்படி போன் செய்யும்போது  எதிர் முனையில் பெண்கள் பேசினால் அந்த பெண்களிடம் ஆபாசமாக பேசுவதோடு அந்தப் பெண்களை உறவுக்கு அழைப்பதாகவும் மேலும் அந்த பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் படங்களை அனுப்புவதாகவும் இது வாடிக்கையாகவே கொண்டு வந்ததும் தெரியவந்தது.

அதுபோல்தான், அந்த மாணவிக்கு அனுப்பியது தெரியவந்தது அதன் அடிப்படையில் அந்த நபர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், கால் முறிவு ஏற்பட்டதால் அந்த நபரை 
 திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

 

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: