/indian-express-tamil/media/media_files/2025/08/18/trichy-mettur-dam-water-inflow-increases-flood-warning-lifted-tamil-news-2025-08-18-16-10-01.jpg)
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 80,000 கன அடி நீரும், கபினியில் இருந்து 25,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேட்டூரில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. உபரி நீர் 16 கண் பாலத்தில் எந்த நேரத்திலும் திறந்து விடப்பட இருப்பதால் காவிரியில் வெள்ளம் ஏற்படலாம். இதனால் ஆற்றில் குளிக்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வரும் தண்ணீரின் அளவு 6000 அடியிலிருந்து 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நீர்திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியாகவும், மாலையில் 22,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்ட தண்ணீரின் அளவு இன்று காலை முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து 1.5 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கவனியிலிருந்து 25,000 கன அடி உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 16 கண் பாலத்தில் திறந்து விடப்பட இருக்கிறது. இதனால் காவேரி பாயும் பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, செல்பி எடுத்து மகிழவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரியினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.