மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

கர்நாடக அணைகளில் இருந்து 1.5 லட்சம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 1.5 லட்சம் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy Mettur Dam Water inflow  increases Flood warning lifted Tamil News

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கே ஆர் எஸ் அணையில் இருந்து 80,000 கன அடி நீரும், கபினியில் இருந்து 25,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேட்டூரில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. உபரி நீர் 16 கண் பாலத்தில் எந்த நேரத்திலும் திறந்து விடப்பட இருப்பதால் காவிரியில் வெள்ளம் ஏற்படலாம். இதனால் ஆற்றில் குளிக்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisment

காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதிகரித்தும், குறைந்​தும் காணப்​படு​கிறது. 
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தொடர் மழையால் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வரும் தண்ணீரின் அளவு 6000 அடியிலிருந்து 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக இருந்த நிலை​யில், நேற்று காலை நீர்​திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடி​யாக​வும், மாலை​யில் 22,000 கனஅடி​யாக​வும் அதிகரிக்கப்பட்ட தண்ணீரின் அளவு இன்று காலை முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து 1.5 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கே ஆர் எஸ் அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கவனியிலிருந்து 25,000 கன அடி உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 
இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 16 கண் பாலத்தில் திறந்து விடப்பட இருக்கிறது. இதனால் காவேரி பாயும் பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, செல்பி எடுத்து மகிழவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரியினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்

Mettur Dam Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: