/indian-express-tamil/media/media_files/5DdZwdvhGDTpWuwOT4CQ.jpeg)
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் நியமனம்; எம்.பி திருநாவுக்கரசர் வாழ்த்து
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக வி.ஜவகர் இருந்து வந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு, திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட எல்.ரெக்ஸ் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.ரெக்ஸ்சுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக எல்.ரெக்ஸ்ஸை பரிந்துரை செய்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மத்திய மாநில முன்னாள் அமைச்சருமான எஸ்.திருநாவுக்கரசரை மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்த எல்.ரெக்ஸ் அவரிடம் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், கராத்தே ரவி உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.