அரசு அதிகாரிகளிடம் எந்தவித தயக்கமுமின்றி மனு கொடுக்கலாம்: திருச்சியின் புதிய கலெக்டர் சரவணன்

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த பிரதீப் குமார் பேரூராட்சிகள் நிர்வாக இயக்குனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த பிரதீப் குமார் பேரூராட்சிகள் நிர்வாக இயக்குனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy new district collector V Saravanan press meet Tamil News

திருச்சி மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த பிரதீப் குமார் பேரூராட்சிகள் நிர்வாக இயக்குனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியராக சரவணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  

Advertisment

இந்த நிலையில், பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சரவணன், "பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக அரசு அதிகாரிகளை சந்தித்து எந்தவித தயக்கமுமின்றி மனு கொடுக்கலாம். அந்த கோரிக்கைகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். 

திருச்சி மாவட்டத்தின் 146 ஆவது ஆட்சியர் சரவணன் என்பதும், இவர் திருச்சி மாநகராட்சியின் ஆணையராக நேற்று வரை பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: