திருச்சிக்கு எப்போது மெட்ரோ வரும்? கே.என். நேரு தகவல்

திருச்சி மாநகரில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, உறையூர் முதல் குடமுருட்டி பாலம் வரை ரூ.68 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

திருச்சி மாநகரில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று, உறையூர் முதல் குடமுருட்டி பாலம் வரை ரூ.68 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
Trichy Kn Nehru

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ரூ.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

Advertisment

இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது;

திருச்சி மாரீஸ் மேம்பால பணிகள் ரயில்வே நிர்வாகத்தால் காலதாமதம் ஆகிவருகிறது. தற்போது 90% பணிகள் நிறைவடைந்து உள்ளது. ரயில்வே நிர்வாகம் 6 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியுள்ளனர். அதேபோல ஜங்சன் அரிஸ்டோ மேம்பால பணிகளும் விரைவில் முடிவையும். மெட்ரோ ரயில் சேவை கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் முதலில் அமைய உள்ளது.

திருச்சியில் மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கு சர்வே எடுப்பதற்காக நிதி ஒதுக்கி உள்ளனர். திருச்சி ஜங்சன் பகுதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை elivated highway அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய அரசு 6 வழி சாலையாக பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு உயர் மட்ட சாலை (elivated highway, அமைப்பதற்கும், கரூர் சாலையில் இருந்து துவாக்குடி வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்றார். 

Advertisment
Advertisements

இதனைத்தொடர்ந்து பாஜக கூட்டணியை போல, இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என சிதம்பரம் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரவானூர் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 135 குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்காளை வழங்கினார் அமைச்சர் கே என் நேரு. 

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: