காணாமல் போன ரூ.22 லட்சம் மதிப்பிலான 133 கைப்பேசிகளை விரைந்து கண்டறிந்த காவல்துறை; உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் காணாமல் போன ரூ.22 லட்சம் மதிப்பிலான 133 கைப்பேசிகளை கண்டுபிடித்த காவல்துறை; உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி கமிஷ்னர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy commissioner mobile

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 133 கைப்பேசிகளை மாநகர காவல்துறையினா் மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன கைப்பேசிகளை விரைந்து கண்டுபிடிக்க காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பொதுமக்கள் கொடுத்த புகார்களின்படி, கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணாமல்போன கைப்பேசிகள் பற்றி ஆய்வு செய்ததில் ரூ.22 லட்சம் மதிப்பிலான 133 ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.

Advertisment
Advertisements

இதையடுத்து திருச்சி மாநகர கே.கே. நகா் ஆயுதப்படை மைதானக் சமுதாயக் கூடத்தில் அந்தக் கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் மாநகர காவல் ஆணையர் ந.காமினி ஒப்படைத்தார்.

க.சண்முகவடிவேல்

Trichy Police

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: