Advertisment

இலங்கை அகதிகள் முகாமில் லஞ்சம்; சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் - திருச்சி காவல் ஆணையர் உத்தரவு

திருச்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்டதாகப் எழுந்த புகாரில், கே.கே. நகா் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மலையாண்டியை சஸ்பெண்ட் செய்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Try police commissioner

திருச்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில்  இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்டதாகப் எழுந்த புகாரில், கே.கே. நகா் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மலையாண்டியை சஸ்பெண்ட் செய்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். 

Advertisment

திருச்சி சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் திருச்சி  கே.கே. நகா் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள மலையாண்டி இலங்கை அகதிகளிடம் லஞ்சம் கேட்டதாகப் புகாா் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையா் காமினி உத்தரவின்பேரில் கே.கே. நகா் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மேற்கொண்ட விசாரணையில், அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து மலையாண்டியைப் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் காமினி உத்தரவிட்டாா்.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பட்டாணி கடையில் ஓசியில் கடலை வாங்கியதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment