/tamil-ie/media/media_files/uploads/2022/11/E-cigarettes.jpg)
திருச்சியில் முறையான அனுமதி இல்லாமல் விற்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் முறையான அனுமதி இல்லாமலும் வெளிநாடு சிகரெட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள்: திருச்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு: 18 வயது நிரம்பியவர்கள் பெயர்களை சேர்க்க அழைப்பு
அதில் காந்தி மார்க்கெட் காவல்நிலையை எல்லைக்குட்பட்ட கடைகளிலும் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசாமி டவரிலும் பெரிய கடைவீதியில் உள்ள கடைகளிலும் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிகோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விற்பனை செய்தவர்களை கைது செய்த போலீசார், சுமார் 4,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் 40 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே இளைஞர்களையும் சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் கஞ்சா குட்கா மற்றும் வெளிநாட்டு சிகரெட் பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.