/tamil-ie/media/media_files/uploads/2018/06/Sexual-harassment-case-Kerala.jpg)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன். இவர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகளின் பிள்ளைகள் 6 மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததாக அவர்களது பெற்றோர் கொடுத்த புகாரில் ஆனந்தனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மண்ணச்சநல்லூர் தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் வீட்டுத் தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்த தொழிலாளர்களின் மகள்களை, தொழிலாளர்கள் வேலை பார்க்கும் சமயத்தில் பாலியல் ரீதியாக அவ்வப்போது சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து 1098க்கு புகார் வந்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்ட குழந்தைகள் நல வாரிய மேற்பார்வையாளர் கலாவதி நடத்திய விசாரணையில், மாணவிகள் மீது நடந்த பாலியல் சீண்டல் நிரூபணம் ஆனது.
பின்னர் இது குறித்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆனந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளரை தேடிவருகிறார்கள். திருச்சி புறநகரில் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.