திருச்சியில் 37 வயது போலீஸ் திடீர் மரணம்: மன அழுத்தம் காரணமா?

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவ விநாயக மூர்த்தி என்கிற காவலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவ விநாயக மூர்த்தி என்கிற காவலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy police sudden death stress issue Tamil News

காவலர் விநாயகமூர்த்தி வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க.சண்முகவடிவேல்

Advertisment

Trichy: ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் விநாயகமூர்த்தி. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சரிந்தார். உடனடியாக அவரது மனைவி 108-க்கு தகவல் கொடுத்தார். 

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக வந்து பார்த்துகாவலர் விநாயகமூர்த்தியை பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

காவலர் விநாயகமூர்த்தி மற்றவர்களிடம் சகஜமாக பழகக் கூடியவர். சில காலங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 37 வயதே ஆன காவலர் திடீரென உயிரிழந்துள்ளது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: