கனமழையால் சேதமடைந்த வீடு: நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தத் தகவல் கிடைத்ததும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

இந்தத் தகவல் கிடைத்ததும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-10-18 at 3.43.30 PM

Trichy

திருச்சியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்த வீட்டைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிவாரணத் தொகையை வழங்கினார்.

Advertisment

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சி, மேலமுருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மகன் சுடர் (52) என்பவருடைய ஓட்டு வீட்டின் மேற்கூரை, கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

WhatsApp Image 2025-10-18 at 3.43.28 PM

அமைச்சர் நேரில் ஆறுதல்:

இந்தத் தகவல் கிடைத்ததும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

அவர் சேதமடைந்த வீட்டை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட சுடருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தன்னுடன் வந்த அரசு அதிகாரிகளை அழைத்து, பாதிக்கப்பட்டவருக்குரிய அடுத்தகட்ட உதவிகளையும், பணிகளையும் விரைவாகச் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, சுடருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிவாரணத் தொகையையும் வழங்கினார்.

Advertisment
Advertisements

WhatsApp Image 2025-10-18 at 3.43.31 PM

இந்த நிகழ்வின்போது திருவெறும்பூர் வட்டாட்சியர் (தாசில்தார்) தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்: க. சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: