திருச்சியில் மழை; சுவர் இடிந்து பள்ளி மாணவி மரணம்

திருச்சியில் பெய்த மழையால் இடிந்து விழுந்த சுவர்; இடிபாடுகளில் சிக்கி பள்ளி மரணம்; மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் பெய்த மழையால் இடிந்து விழுந்த சுவர்; இடிபாடுகளில் சிக்கி பள்ளி மரணம்; மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

author-image
WebDesk
New Update
trichy wall collapse

திருச்சியில் கடந்த சில தினங்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்த கனமழையினால் இன்று நண்பகல், திருச்சி இ.பி.ரோடு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் சேகர் என்பவருக்கு சொந்தமான மண்சுவரால் ஆன ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. 

Advertisment

இந்த விபத்தில் அப்பகுதியில் வசித்து வந்த கார்த்திகா (வயது 11) என்ற மாணவி இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்தபோது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், அங்கு வசித்து வந்த கொளஞ்சி (வயது 42) என்பவர் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

திருச்சியில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: