டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டியூட் வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

திருவெறும்பூர் அருகே டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் நடத்தி வரும் முதியவர் அங்கு வரும் இளம்பெண், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அந்த பகுதியில் டைப்பிங் இன்ஸ்டியூட் வைத்து நடத்தி வருகிறார்.

டைப் ரைட்டிங்  இன்ஸ்டியூட்க்கு வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் என பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பதுபோல், சத்தியமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மேலும் அவர்களின் உடல் அங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு அங்குள்ள மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: