Advertisment

பாஜக கனவு பலிக்காது; அடுத்து நாங்கதான்: திருச்சி சிவா

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நரேந்திர மோடி அரசின் 2வது இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக திமுக எம்பி திருச்சி சிவா பரபரப்பு கருத்து கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy Siva Uppuma story, Rajya Sabha, DMK MP Trichy Siva uppuma story, DMK, Trichy Siva speech in Rajya Sabha, திருச்சி சிவா, ராஜ்ய சபா, திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை, பாஜக, திமுக எம்பி திருச்சி சிவா

“அடுத்து நாங்கள்தான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என திருச்சி சிவா கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2வது  இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1, 2024) தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், “தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்” என்று திருச்சி சிவா கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் பேசுகையில், “வரும் தேர்தலில், இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்; தேர்தலுக்குப் பிறகு நாங்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்.

அடுத்த ஆண்டு பாஜக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என நினைக்கின்றனர்; அது ஒருபோதும் நடக்காது.

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு தேவையான மிகச்சிறந்த அம்சங்களுடன் சிறந்த பட்ஜெட்டை நாங்கள் வந்து தாக்கல் செய்வோம்" என்றார்.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நாங்கள் வந்து புதிய பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்று தெரிவித்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment