லஞ்சம் பெற்ற திருச்சி முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டு சிறை – சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

2010 ஆம் ஆண்டில் ரூ 1000 லஞ்சம்; திருச்சி மாவட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2010 ஆம் ஆண்டில் ரூ 1000 லஞ்சம்; திருச்சி மாவட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
New Update
Arrest

திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு தெப்பகுளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதியின் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவானது பரிந்துரை செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. 

Advertisment

கடந்த 02.08.2010 அன்று, அந்த மனு தொடர்பாக புகார்தாரர் சரஸ்வதி அப்போது பணியிலிருந்த திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) திலகமணி என்பவரை சந்தித்து மனு தொடர்பாக கேட்டபோது, புகார்தாரர் சரஸ்வதியிடம் சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி கடந்த 02.08.2010 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார். 

அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது புகார்தாரர் சரஸ்வதியிடமிருந்து உதவி இயக்குநர் திலகமணி லஞ்சப் பணம் ரூ.1000 கேட்டு பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து 18.09.2025 அன்று குற்றம் சாட்டப்பட்ட திலகமணி (முன்னாள் திருச்சி மாவட்ட உதவி இயக்குநர் சிறுசேமிப்பு) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பவருக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏகபோக காலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார்.

Advertisment
Advertisements

இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி தண்டணை பெற்றுதர உதவி புரிந்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Trichy bribe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: