திருச்சி: இந்த பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் கட்

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நாளை வியாழக்கிழமை (ஜூன் -12) ஒரு நாள் மட்டும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நாளை வியாழக்கிழமை (ஜூன் -12) ஒரு நாள் மட்டும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy Srirangam drinking water supply cut on 12 June 2025 Thursday Tamil News

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நாளை வியாழக்கிழமை (ஜூன் -12) ஒரு நாள் மட்டும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொது தரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணிகள் இன்று புதன்கிழமை (ஜூன் 11) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (ஜூன் 12) )ஒருநாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அதன்படி, மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர் புதியது,சுந்தராஜபுரம் பழையது, ஜே.கே. நகர், செம்பட்டு, E.B  காலணி, காஜாமலை பழையது, ரெங்காநகர்,  சுப்ரமணிய நகர்,  புதியது, வி.என். நகர் புதியது,  தென்றல் நகர் புதியது, கவிபாரதிநகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, எடமலைப்பட்டிபுதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர்  புதியது, தென்றல் நகர் பழையது, அரியமங்கலம் கிராமம்,  மலையப்பநகர் புதியது,மலையப்பநகர் பழையது, ரயில்நகர் புதியது, ரயில்நகர் பழையது,  முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது,முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, M.K .கோட்டை செக்ஸன் ஆபிஸ், M.K. கோட்டை நாகம்மைவீதி, M.K கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது,பொன்னேரிபுரம் பழையது,  அம்பேத்கார் நகர், விவேகானந்தர் நகர், LIC புதியது, கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த நகர்,விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் விநியோகம் 12.06.2025 ஒரு நாள் இருக்காது. 13.06.2025 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.   எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி  மாநகராட்சி ஆணையரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: