/indian-express-tamil/media/media_files/YnAjHXAG6MiOVQKRmnjF.jpeg)
Trichy
திருச்சி ஸ்ரீரங்கம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்காவில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இதே பகுதியில் கடந்த 10 ஆம் தேதி பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளம் ஏற்படுவதற்கு, பாதாள சாக்கடையில் குழாய் வெடித்தது தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
மேலும், பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.