7 மாதத்தில் 72 பேர் மீது குண்டர் சட்டம்: திருச்சி எஸ்.பி தகவல்

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 72 பேர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 72 பேர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Trichy Superintendent Police on 72 Goondas Act case booked last 7 months Tamil News

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 72 பேர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புங்கனூர் கிராமத்தில் உள்ள குமரன் பேக்கரி அருகே கடந்த 21.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த முகேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு அவர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Advertisment

புங்கனூர் சாய் நகர் அருகே கடந்த 23.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஞானப்பிரகாசம் என்பவர் கைது செய்யப்பட்டு திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அதே போன்று ராம்ஜிநகர் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே கடந்த 27.07.2025-ஆம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ரமணி என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து, இருவரிடமிருந்தும் 3.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.

மேற்படி மூன்று கஞ்சா வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான முகேஷ், ஞானபிரகாசம் மற்றும் ரமணி ஆகியோர்கள் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்திருந்ததால் அவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மேற்படி மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டார். சிறையில் உள்ள மூவருக்கும் இது தொடர்பான ஆணை வழங்கப்பட்டது. 

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 72 பேர் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். 

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: