திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலைத் திருட்டு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோவிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருட்டு புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. 25 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்